Sunday, 16 July 2017

Big boss

"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரே துறை என்பது தவிர, எந்த இரத்த சம்மந்தமும் இல்லாதவர்களின், "புற" மற்றும் "அகம் "சார்ந்த உணர்வுகளை,விதவிதமாக விமர்ச்சிக்கும் நாம்...நம்முடைய நிஜக் குடும்பத்தில் எவ்விதம் நடந்து கொள்கிறோம் என்பதையும்... அலசிப் பார்த்து, நம்முடைய அகப்பேய்களையும் அடையாளம் கண்டு ,விரட்டவும்....சமையல் முதல், கழிவறையைச் சுத்தம் செய்வது வரை, நாமும் பங்கெடுத்துக் கொள்ள முற்படுவதோடு, புறம் பேசுவதனால் உண்டாகும் விளவுகள் பற்றியும்,EGO,போட்டி பொறாமைகளின் கேடுகள் பற்றியும் சிந்திப்பதோடு....அவ்வப்போது ஆடல் பாடல்கள் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதால் உண்டாகும் மகழ்ச்சி குறித்தும்.... அறிந்து கொள்வது ஆரோக்கியம் என்று கருதுகிறேன்...

பின்குறிப்பு: வெறும் நூறு நாட்களே பங்கேற்கப் போகும் வீட்டு உறுப்பினரைக் காசு கொடுத்து கோடிக் கணக்கான ஓட்டுக்கள் போட்டு ஜெயிக்க வைக்கும் நாம், ஐந்து முழு வருடங்கள் நம்மை ஆளப்போகும்...நாட்டு உறுப்பனரைக் காசு வாங்கிக் கொண்டு தவறான முறையில் தேர்ந்தெடுப்பது நியாயம் தானா என்றும் சிந்தித்துப் பார்ப்பது நலம்...அந்த ஒரு ஓட்டையாவது வாக்குச் சாவடி சென்று போட்டோமா என்று சிந்திப்பது கூடுதல் நலம்.!!

நமக்கெல்லாம் " பிக் பாஸ்" மற்றும் கேமரா ..."கடவுள் " ஒருவரே....

கணேசலிங்கம் செண்பகம்
செல்:  9840827369

No comments:

Post a Comment