Thursday, 28 September 2017

ஆண்மை, பெண்மை, ஆளுமை

ஆண்மை,பெண்மை ...இரண்டிற்குமே வெவ்வேறு விதமான தனித்தன்மைகள் உள்ளன.ஆளுமை குறித்துப் பேசும் போது தான் சர்ச்சைகள் தோன்றுகின்றன.
"ஆண்மை தவறேல்" என்று கூறிய பாரதி தான்..."மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்ய வேண்டும்" எனவும் "மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோவோம்" என்றும் கூறினார்...எது உயர்ந்தது ...தேவை என்பதெல்லாம் காலம்,தேசம்,இனம்...இன்ன பிற சூழல்களைப் பொறுத்து மாறுபடும்;வேறுபடும்...மிஷ்கின், திரையுலகில் மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்..பாடல் இல்லாமல், வசனமே இல்லாமல் படங்கள் வருவதெல்லாம் ஒரு பரிசோதனையே..!..இதில் ஆண்மை...பெண்மை..ஆளுமை குறித்த ஏற்றத் தாழ்வுகளை ஏன் இழுக்க வேண்டும்!

-கணேசலிங்கம் செண்பகம்

Monday, 25 September 2017

ஈகோ...

"Ego" என்பது இறங்கி வராமல் இருப்பது; "தன்மானம்" என்பது இறங்கி விடாமல் இருப்பது.! ..வேறுபாடு புரியாமல் தான் நம்மில் பலர் நல்ல உறவுகளையும், நட்புகளையும் இழக்கிறோமோ!!

Saturday, 16 September 2017

மார்புப் புற்று நோயில் மகவைப் பிரியவிருக்கும் தாய்க்கும்,தெய்வத்திற்குமான போராட்ட தருணத்தில்...

வலி தரக்கூடிய வலிமையான வரிகள்..!!. தாய்மையின் தவிப்பை சாதாரணமாக சமாதானமோ, சமரசமோ செய்துவிட முடியாது...தாயும் தெய்வமும் வேறு வேறு வடிவங்கள் அல்ல...இரு கடவுள்களுக்குள் நடக்கும் யுத்தத்தில் வெல்வது விதி என்றாலும்.. இது போன்று விடை தெரியாத புதிர்கள் இப்புவியில் ஏராளம்.